கொலை செய்யப்பட்ட சதீஷ்.
கொலை செய்யப்பட்ட சதீஷ். 
க்ரைம்

நைட் பார்ட்டியில் நடந்த பயங்கரம்... தலையில் கல்லைப்போட்டு நண்பரை கொலை செய்த கும்பல் கைது!

காமதேனு

குடிபோதையில் திட்டியதால் நண்பன் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்த 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு சிவாஜிநகரைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் திருவிழாவைக் காண மைசூரில் உள்ள தொம்மாளூருக்கு ஏப்ரல் 18-ம் தேதி வந்திருந்தார். அங்கு பழைய நண்பர்கள் சந்தித்து பேசியுள்ளனர். அவருடைய பழைய நண்பர்கள் பூங்காவில் பார்ட்டி நடத்தியுள்ளார்.

பெங்களூரு

இந்த பார்ட்டியில் அனைவரும் மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது சதீஷ்க்கு போதை அதிமாகியுள்ளது. அதனால், குடிபோதையில் கட்டுப்பாட்டை இழந்த சதீஷ், தன்னுடன் இருந்த சந்தோஷ் மற்றும் பவன் ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

அத்துடன் குடிபோதையில் அவர்களை கீழே தள்ளி தகராறு செய்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் கைகலப்பும் ஏற்பட்டது. அப்போது சதீஷ் தலையில் சிமென்ட் கல்லை எடுத்து அவர்கள் போட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த சதீஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் சந்தோஷ், பவன் உள்பட அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஹலசூர் போலீஸார், விரைந்து வந்து சதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சதீஷ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

கைது செய்யப்பட்டவர்கள்

இதையடுத்து தனிப்படை அமைத்து சதீஷை கொலை செய்தவர்களை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், பதுங்கியிருந்த பவன், சந்தோஷ், ரஞ்சித், ரங்கநாத், வினோத் ஆகியோரை ஹலசூர் போலீஸார் நேற்று மாலை கைது செய்தனர். இக்கொலை தொடர்பாக போலீஸார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT