சிவகாசி அருகே கடன் தொல்லையால் ஆசிரியர் குடும்பத்தை சேர்ந்த 2 மாத குழந்தை உட்பட 5 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கள் பாலாஜி நகரை சேர்ந்தவர் லிங்கம். இவர் தேவதானத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பழனியம்மாள், சுக்கிவார்பட்டியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இவர்கள் மகள் ஆனந்தவள்ளி, மகன் ஆதித்யா மற்றும் பேத்தி சசிகா எனும் 2 மாத குழந்தையுடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும், வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை.
சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, லிங்கம் மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் மற்றும் குழந்தைகள் ஆனந்தவள்ளி, ஆதித்யா, சசிகா என ஐந்து பேரும் இறந்த நிலையில் கிடந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி போலீஸார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஐந்து பேர் தற்கொலை காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
'ஆசிரியர் லிங்கம், 40க்கும் மேற்பட்டோரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் மீண்டும் கடனை கட்ட சொல்லி அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். இதை சரிசெய்வதற்காக, தந்தையிடம் தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். அவரது தந்தை சொத்துக்களை பிரித்து கொடுப்பதற்கு மறுத்து வந்துள்ளார். இதனால் குடும்பமே விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்' என்று, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடன் தொல்லையால், இரண்டு மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்து சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
வீடியோ காலில் எதற்கு பேசுற? மனைவியைக் கொலை செய்து புதைத்த கணவன்!
வங்கக்கடலில் 'ரெமல்' புயல்... 26ம் தேதி கரையைக் கடக்கும் என கணிப்பு!
மெக்சிகோவில் பிரச்சாரத்தில் மேடை சரிந்து விபத்து: 5 பேர் பலி; 50 பேர் படுகாயம்!