தற்கொலை செய்து கொண்ட உமாராணி
தற்கொலை செய்து கொண்ட உமாராணி 
க்ரைம்

மகள் தற்கொலையில் சந்தேகம் கிளப்பிய பெற்றோர்: சிக்கிய கணவன், மாமனார், மைத்துனர்கள்

காமதேனு

பெண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்த வழக்கில், வரதட்சணை கொடுமையினால் தற்கொலைக்கு தூண்டியதாக கணவன், மாமனார் உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள அத்திக்குளத்துப் பட்டியைச் சேர்ந்தவர் ரைஸ் மில் உரிமையாளர் கண்ணன். இவரின் மனைவி உமாராணி(37). இவர்களுக்கு பாலகிருஷ்ணன் என்ற மகனும், பிரமிஷா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால், உமாராணி வீட்டிலிருந்து கோபித்துக்கொண்டு சென்றுள்ளார். அதன்பின்னர் நேற்று காலை வீட்டின் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் சடலமாக உமாராணி மீட்கப்பட்டார்.

உமாராணியின் கணவர் கண்ணன்

இதுகுறித்து, தகவலறிந்த திண்டுக்கல் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உமாராணியின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உமாராணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் ரயில்வே போலீஸாரிடம் புகார் அளித்தனர்.

அதன்பின்னர், போலீஸார் நடத்திய விசாரணையில் உமாராணியின் கணவர் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் அவரிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியது தெரியவந்தது. இதனால், மனமுடைந்த உமாராணி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துதல், தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கண்ணன், அவரது தந்தை திருப்பதி, சகோதரர்கள் நாகராஜ், பாண்டி ஆகிய 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT