விபத்தில் உயிரிழந்த சதீஷ், தணிகாசலம்
விபத்தில் உயிரிழந்த சதீஷ், தணிகாசலம்  
க்ரைம்

பைக்குகள் நேருக்கு நேர் மோதல்... பாதசாரியையும் பலிகொண்ட சோகம்!

காமதேனு

செங்கல்பட்டு அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், அரசு சட்டக் கல்லூரி மாணவர் மற்றும் சாலையோரம் நடந்து நடந்து சென்றவர் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாய் கிருஷ்ணன், கோகுல கண்ணன் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த சதீஷ் ஆகிய மூவரும் செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள். நேற்று இரவு இவர்கள் மூன்று பேரும் ராட்டினம்கிணறு பகுதியில் இருந்து மேலமையூர் நோக்கி ஒரே பைக்கில் அதிவேகமாகச் சென்றுள்ளனர்.

செங்கல்பட்டில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

எதிர்திசையில் திருமணி ஜானகிபுரம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் நந்தகோபால் என்பவர் அண்ணாநகர் பிரதான சாலையில் டூவீலரில் வந்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக இந்த இரண்டு டூவீலர்களும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கட்டிட மேஸ்திரி தணிகாசலமும் பலத்தகாயம்பட்டு விழுந்திருக்கிறார். இதில், சட்டக் கல்லூரி மாணவர் சதீஷும் மேஸ்திரி தணிகாசலம் (46) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்

அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் சாய் கிருஷ்ணன், கோகுல் மற்றும் பெயிண்டர் நந்தகோபால் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு நகர போலீஸார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் மேல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிவேகத்தில் வந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில், சாலையோரம் நடந்து சென்றவர் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் செங்கல்பட்டுப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT