க்ரைம்

ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு: மர்ம கும்பல் கைவரிசை

காமதேனு

குஜராத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருக்கும் ரஞ்சித்குமார் என்பவரின் சிதம்பரத்தில் உள்ள பூர்வீக வீட்டில் 14 பவுன் தங்க நகைகளை மர்ம கும்பல் திருடிச் சென்றது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் மாரியப்பா நகரில் வசிப்பவர் ஜெயபாலன்(73) இவர் தமிழக மின்வாரியத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மகன் ரஞ்சித் குமார் குஜராத் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக உள்ளார்.

ஜெயபாலன் குஜராத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருக்கும் தன் மகனின் வீட்டிற்கு சென்றிருந்தார். கடந்த இருமாதங்களாகவே ஜெயபாலன் அங்கேயே வசித்துவருகிறார். இந்நிலையில் அவர் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்த அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து அவருக்குத் தகவல் கொடுத்தனர்.

அவர் வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 14 பவுன் நகைகள், ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை திருடு போயிருந்தது. இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT