சினிமா

பாலியல் வழக்கில் தப்பியோடிய நடிகர் இன்று கைதாகிறார்?

காமதேனு

பாலியல் வன்கொடுமை வழக்கில் துபாய்க்கு தப்பியோடிய நடிகர் இன்று கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.

பாலியல் வன்கொடுமை செய்ததாக மலையாள நடிகை ஒருவர், நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது போலீஸில் புகார் கொடுத்தார். இதனால் போலீஸ் விசாரணைக்கு பயந்து துபாய்க்கு தப்பி ஓடிய விஜய் பாபுவை கைது செய்ய கொச்சி போலீஸார் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டனர். பின்னர் அங்கிருந்து ஜார்ஜியா நாட்டுக்கு தப்பிச் சென்றார். அவர் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது.

அவர் சொத்துகளை முடக்க போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இதனால் விஜய் பாபு சரணடைய தீர்மானித்துள்ளார். கேரள உயர் நீதிமன்றத்தில் விஜய் பாபுவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தது. விஜய் பாபுவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு விட்டதால் இந்தியா திரும்ப முடியவில்லை என்றும், விசாரணை அதிகாரி முன்போ, நீதிமன்றத்திலோ ஆஜராக தயாராக இருப்பதாகவும் அவருடைய வழக்கறிஞர் கூறினார். அதோடு 30-ம் தேதி இந்தியா திரும்புவதற்காக எடுத்துள்ள விமான டிக்கெட்டையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்நிலையில் அவர் இன்று கொச்சி திரும்ப இருக்கிறார். அவரை விமான நிலையத்திலேயே கைது செய்ய போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT