வெற்றிமாறன்
வெற்றிமாறன் மீண்டும் `விடுதலை’ படத்திற்கே திரும்பும் வெற்றிமாறன்!
சினிமா

மீண்டும் `விடுதலை’ படத்திற்கே திரும்பும் வெற்றிமாறன்!

காமதேனு

இயக்குநர் வெற்றிமாறன் மீண்டும் ‘விடுதலை’ படத்திலேயே கவனம் செலுத்த உள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான 'விடுதலை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படம் இது. சிறுகதையான இதை திரைக்கதையாக இரண்டு பாகங்களாக உருவாக்கி உள்ளார் வெற்றிமாறன். முதல் பாகத்தின் முடிவிலேயே இரண்டாம் பாகத்திற்கான லீடும் வைத்திருந்தார் வெற்றிமாறன்.

இரண்டு பாகங்களுக்கான படப்பிடிப்பும் ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், கதைக்கு தேவைப்படும் சில காட்சிகளை படமாக்க உள்ளார் வெற்றிமாறன். மேலும் இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளிலும் கவனம் செலுத்த உள்ளார். ’விடுதலை’ படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூர்யாவும் தற்போது ‘சூர்யா 42’ படத்தில் பிஸியாக உள்ளதால் மீண்டும் ‘விடுதலை2’ படத்திலேயே கவனம் செலுத்த உள்ளார் வெற்றிமாறன். ‘விடுதலை’ இரண்டாம் பாகம் இந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT