சினிமா

சூப்பர் ஹிட் இயக்குநருடன் கைகோர்க்கிறார் சூர்யா

காமதேனு

’வாடிவாசல்’ படத்துக்கு முன்பாக குறுகிய காலத்தில் தயாராகும் படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாலா இயக்கும் படத்தில் இப்போது நடித்து வருகிறார் நடிகர் சூர்யா. இதன் ஷூட்டிங் கன்னியாகுமரியில் தொடங்கி, நடந்து முடிந்துள்ளது. இதில் சூர்யா, காது கேட்காத மீனவராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதன் அடுத்த ஷெட்யூல் விரைவில் தொடங்க இருக்கிறது.

தா.செ.ஞானவேல் ராஜா, சூர்யா

இதையடுத்து வெற்றிமாறன் இயக்கும் ’வாடிவாசல்’ படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. வெற்றிமாறன் இப்போது, விஜய் சேதுபதி, சூரி நடிக்கும் ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங், விஜய் சேதுபதி கால்ஷீட்டுக்காக காத்திருந்தது. இப்போதுதான் இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி இருக்கிறது. இந்தப் படம் முடிவதற்குள், குறைந்த நாட்களில் முடிக்கும் வகையில் ஒரு படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

அந்தப் படத்தை ’ஜெய்பீம்’ இயக்குநர் தா.செ.ஞானவேல் ராஜா இயக்க இருப்பதாகவும் சூர்யாவே தயாரிக்க இருப்பதாகவும் விரைவில் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி சூர்யா தரப்பில் விசாரித்தபோது, அதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சூர்யா, அடுத்து சிறுத்தை சிவா, சுதா கொங்கரா இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார்.

SCROLL FOR NEXT