சினிமா

சூர்யா - பாலா படத்துக்கு மதுரையில் பிரம்மாண்ட செட்!

காமதேனு

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் ஷூட்டிங், மார்ச் 13- ம் தேதி தொடங்குகிறது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ’எதற்கும் துணிந்தவன்’ படம் இன்று வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா, திவ்யா உட்பட பலர் நடித்துள்ளனர். மூன்று வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யா படம் தியேட்டரில் வெளியானதால், படத்துக்கு பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது.

இதை அடுத்து சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை பாலா இயக்குகிறார். மதுரை பின்னணியில் இதன் கதை நடக்கிறது. இதில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்துக்காக மதுரை அருகே பிரம்மாண்ட செட் அமைத்துள்ளனர். அங்கே வரும் 13 -ம் தேதி ஷூட்டிங் தொடங்குகிறது. மதுரையில் 30 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. அதன் பிறகு சென்னையில் ஷூட்டிங் நடக்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT