சினிமா

வாய் பேச முடியாதவராக நடிக்கிறாரா சூர்யா?

காமதேனு

பாலா இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா, காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத கேரக்டரில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் சூர்யா நடித்துள்ள ’எதற்கும் துணிந்தவன்’ வரும் 10 ஆம் தேதி வெளியாகிறது. பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா உட்பட பலர் இதில் நடித்துள்ளனர்.

சூர்யா, பாலா

இந்தப் படத்தை அடுத்து, பாலா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். இதன் ஷூட்டிங் இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. பாலா இயக்கத்தில், ‘நந்தா’, ’பிதாமகன்’ படங்களில் நடித்துள்ளார் சூர்யா. அந்தப் படங்கள் வரவேற்பைப் பெற்றதால், இந்தப் படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் சூர்யா இரண்டு கேரக்டர்களில் நடிக்க இருப்பதாகவும் அதில் ஒன்று காது கேளாத, வாய் பேச முடியாத கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. வழக்கமாக, தனது படங்களில் வித்தியாசமான கேரக்டரை வடிவமைக்கும் பாலா, இந்தப் படத்திலும் அப்படி ஒரு கேரக்டரை உருவாக்கி இருப்பதாகத் தெரிகிறது.

SCROLL FOR NEXT