சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் விஜய்யை அடுத்து காஷ்மீரில் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு?
சினிமா

விஜய்யை அடுத்து காஷ்மீரில் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு?

காமதேனு

சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்க இருக்கிறது.

நடிகர் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் அது நிறைவடைந்தது. காஷ்மீரில் கடும் குளிருக்கு மத்தியில் எப்படி படப்பிடிப்பு நடந்தது என்பதை படக்குழு வீடியோவாக வெளியிட்டு இருந்தது. மேலும், நேற்று முன்தினம் சென்னைக்கு படக்குழு திரும்பியுள்ளது. இந்த நிலையில், விஜய் படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயனுடைய அடுத்தப் படமும் காஷ்மீரில் எடுக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சாய் பல்லவி ஜோடியாக நடிக்க சிவகார்த்திகேயனின் அடுத்தப் படம் விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்காக, லொகேஷன் தேடும் பணியில் இயக்குநர் தீவிரமாக இருக்கிறார். இந்தப் படத்தில் ஆர்மி ஆஃபீசராக நடிக்கிறார் சிவகார்த்திகேயன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். மே மாதம் தொடங்க இருக்கும் இதன் படப்பிடிப்பு காஷ்மீரிலும் நடக்கிறது என்பது சமீபத்திய தகவல். இது குறித்து படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

SCROLL FOR NEXT