சினிமா

மீண்டும் தொடங்குகிறது ஷாருக், நயன்தாரா படம்!

காமதேனு

ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இந்திப் படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் மீண்டும் தொடங்குகிறது.

ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார், அட்லீ. இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். மற்றும் சான்யா மல்கோத்ரா, சுனில் குரோவர் உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் ஷாருக்கான் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

ஷாருக்கான், நயன்தாரா

இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன் புனேவின் தொடங்கியது. அதில் நயன்தாராவும் கலந்துகொண்டார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், ஷாருக்கான் மகன் ஆர்யன் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதால், ஷூட்டிங் தடைப்பட்டது. பின்னர் ஷாருக்கான், ’பதான்’ என்ற இந்திப் படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்றார்.

ஷாருக்கான், நயன்தாரா, அட்லீ

இதனால், அட்லீ இயக்கும் படம் நின்றுவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி வெளியானது. இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் மும்பையில் மீண்டும் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் இந்த படப்பிடிப்பில் நயன்தாராவும் கலந்துகொள்கிறார்.

SCROLL FOR NEXT