சினிமா

நடிகை கங்கனா வழக்கு: நீதிமன்றம் தள்ளுபடி

காமதேனு

தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி நடிகை கங்கனா தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

டிவி பேட்டி ஒன்றில் தன்னை அவதூறாகப் பேசியதாக கூறி நடிகை கங்கனா ரனாவத் மீது, பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், 2020- ஆம் ஆண்டு மும்பை அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

ஜாவேத் அக்தர், கங்கனா

இந்நிலையில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தனக்கு எதிரான மனு விசாரணையில், ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக நடிகை கங்கனா ரனாவத் குற்றம் சாட்டினார். அதோடு இந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறி, தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் செசன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த செசன்ஸ் நீதிமன்றமும் அவர் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT