காத்துவாக்குல ரெண்டு காதல்- நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா
காத்துவாக்குல ரெண்டு காதல்- நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா 
சினிமா

முடிந்தது ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஷூட்டிங்

காமதேனு

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிவடைந்து விட்டதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள படம், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனத்துடன் இணைந்து விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படம் ஏப்ரல் 28-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

படப்பிடிப்பு நிறைவில் விக்னேஷ் சிவன், நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா

இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் ‘டூ டுட்டூ’ என்ற பாடலின் ஷூட்டிங் மட்டும் முடிவடையாமல் இருந்தது. அதை இப்போது எடுத்து முடித்துள்ளனர். அதோடு படத்தின் ஷூட்டிங் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து கேக் வெட்டி ஷூட்டிங்கை முடிவு செய்துள்ள படக்குழு, அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

`காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் கண்மணி என்ற கேரக்டரில் நயன்தாராவும், கதீஜா என்ற கேரக்டரில் சமந்தாவும் நடிக்கின்றனர். சமீபத்தில் சமந்தாவுக்கு தோடு ஒன்றை பரிசளித்த நயன்தாரா, அதில் டியர் கதீஜாவுக்கு, அன்புடன் கண்மணி என்று எழுதி இருந்தார். அதற்கு நன்றி டார்லிங் நயன் என்று பதிலளித்திருந்தார், சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT