நடிகர் அஜித்.
நடிகர் அஜித். கைக்குழந்தையுடன் விமான நிலையத்தில் தவித்த பெண்: நடிகர் அஜித் செய்த செயல் வைரல்!
சினிமா

கைக்குழந்தையுடன் விமான நிலையத்தில் தவித்த பெண்: நடிகர் அஜித் செய்த செயல் வைரல்!

காமதேனு

நடிகர் அஜித் செய்திருக்கும் உதவியால் நெகிழ்ந்த பெண்மணி பகிர்ந்திருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

’துணிவு’ படத்தை முடித்துவிட்டு நடிகர் அஜித் தன்னுடைய 61-வது படத்திற்குத் தயாராகி வருகிறார். இதற்கு முன்பு, தன்னுடைய குடும்பத்துடன் லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார் அஜித்.

அந்த வகையில் அவரது மனைவி ஷாலினி அஜித் சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்த புகைப்படங்களும், அஜித் ஏர்போர்ட்டில் இருக்கக்கூடிய வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், ஏர்போர்ட்டில் அஜித்தின் ரசிகை ஒருவர் கைக்குழந்தையுடன் அவருடன் எடுத்த புகைப்படமும் அதற்கு அவரது கணவர் பகிர்ந்திருக்கக்கூடிய பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில் அவர், " என் மனைவி கிளாஸோவில் இருந்து சென்னைக்கு தனியாக பயணித்து வந்தார். அவருடன் என் பத்துமாத கைக்குழந்தையும் இருந்தது. அதோடு டிராவல் பை மற்றும் குழந்தைகளுக்கான பை ஆகியவற்றையும் வைத்திருந்தார். லண்டனின் ஹீத்ரு விமானநிலையத்தில் நடிகர் அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. என் மனைவியுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தது மட்டுமில்லாமல், அவர் குழந்தைகளுடன் தனியாக பயணித்து வந்ததையும் உணர்ந்து கொண்டு, அவருக்கு உதவினார். அஜித்தின் உதவியை என் மனைவி மறுத்தும், ‘எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதனால், உங்கள் சிரமத்தைப் புரிந்து கொள்கிறேன்’ என்றும் சொன்னார்.

அவருடன் பயணித்தவர் ’நான் எடுத்து வருகிறேன்’ என்று சொல்லியும், என் மனைவி மீண்டும் ஒருமுறை கேட்டும் அவரே கடைசி வரை எடுத்து வந்தார். இப்படி புகழுடன் இருக்கக்கூடிய ஒரு நபர் இந்த அளவுக்கு தன்மையுடன் இருப்பது பற்றி நான் வியக்கிறேன்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT