சினிமா

நீண்ட நாட்களுக்குப் பின் பொது நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்!

காமதேனு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கரோனா காலகட்டம் என்பதால் திரையுலக பிரபலங்களில் பெரும்பாலோனார், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த்தும் ’அண்ணாத்த’ ஷூட்டிங்கை முடித்த பிறகு பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை.

தனது பிறந்தநாள், புத்தாண்டு, பொங்கல் அன்று வழக்கம்போல் வீட்டில் இருந்தபடியே ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிலையில் நீண்ட நாட்கள் கழித்து, திருவல்லிக்கேணியில் நடந்த தனது நெருங்கிய நண்பரின் ஓட்டல் திறப்பு விழாவில் அவர் கலந்துகொண்டார். அவருடன் லதா ரஜினிகாந்த், சவுந்தர்யா ஆகியோரும் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்துகொண்ட புகைப்படங்கள், சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன.

SCROLL FOR NEXT