சினிமா

`புஷ்பா 2’ கதை திருப்தி இல்லையாம்: அமெரிக்கா சென்றார் இயக்குநர் சுகுமார்

காமதேனு

’புஷ்பா 2’ படத்தின் கதை இன்னும் திருப்தியாக வராததால், அதன் படப்பிடிப்பு தள்ளிப் போயிருப்பதாகக் கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம், ’புஷ்பா’. சுகுமார் இயக்கிய இந்தப் படத்தில், ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். மலையாள நடிகர் பஹத் ஃபாசில், கன்னட நடிகர் தனஞ்செயா, சுனில், அஜய் கோஷ், ராவ் ரமேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் வரவேற்பைப் பெற்றிருந்தன.

தெலுங்கு தவிர, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதலில் இந்தப் படத்தை இரண்டு பாகமாக எடுக்கும் திட்டம் படக் குழுவிடம் இல்லை. பிறகுதான் அவர்களுக்கு அப்படி ஒரு எண்ணம் உருவானதாகக் கூறப்படுகிறது.

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா

இந்நிலையில், இந்தப் படத்தின் அடுத்த பாகத்துக்கான வேலைகளைத் தொடங்கினார் சுகுமார். வட இந்தியாவிலும் இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பதால், 2-ம் பாகத்தின் கதையை சிறப்பாக உருவாக்க முடிவு செய்துள்ளார். உருவாக்கிய கதை இன்னும் திருப்தியாக இல்லை என்பதால் அவர் இப்போது அமெரிக்கா சென்றுள்ளார்.

அங்குள்ள ரிசார்ட்டில் தனிமையில் இருக்கும் அவர் கதை முடிந்த பிறகே, ஹைதராபாத் திரும்ப இருக்கிறார். இரண்டாம் பாதில், பகத் பாசிலுக்கும் அல்லு அர்ஜுனுக்குமான மோதல், அம்மா சென்டிமென்ட் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT