சினிமா

கே.ஜி.எஃப் இயக்குநர் பிரசாந்த் நீலின் ’சலார்’ கதையை புகழும் பிரபல ஹீரோ!

காமதேனு

பிரசாந்த் நீல் இயக்கும் ’சலார்’ படத்தில் நடிப்பது உண்மைதான் என்று நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.

கே.ஜி.எஃப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல், அடுத்து இயக்கும் படம் ’சலார்’. இதில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். ஸ்ருதி ஹாசன் ஹீரோயின். ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ், மது குருசாமி உட்பட பலர் நடிக்கின்றனர். அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் உருவாகிறது.

பிரசாந்த் நீல்

இதில், பிரபாஸ் இரண்டு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வேடங்களுக்காக பிரபாஸ் அதிரடி வித்தியாசம் காட்ட இருக்கிறார். அண்ணன்- தம்பியாக நடிக்கும் அவர், தம்பி கேரக்டருக்காக உடல் எடையை 20 கிலோ குறைத்துள்ளார். அஜித்தின் ‘வாலி’ படம் போல அண்ணன், தம்பிகளுக்குள் நடக்கும் மோதல்தான் கதை என்றும் கூறப்படுகிறது. ஆனால், படக்குழு இதை உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், நடிகர் பிருத்விராஜ் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

பிரபாஸ், பிருத்விராஜ்

அதை உறுதிப்படுத்தியுள்ள பிருத்விராஜ், ‘சலார், உண்மை யிலேயே சிலிர்க்கும் கதையை கொண்ட படம். இரண்டு வருடத்துக்கு முன்பு இந்தக் கதையை பிரசாந்த் நீல் கூறினார். அதைக் கேட்டு உற்சாகமடைந்தேன். விரைவில் இந்தப் படத்தில் நடிப்பதற்கான தேதிகளை இயக்குநருடன் பேசி முடிவு செய்வேன். ’சலார்’ சூப்பர்ப் ஸ்கிரிப்ட் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT