காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் கனகராஜை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் சந்தித்து பேசினார்
காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் கனகராஜை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் சந்தித்து பேசினார் 
சினிமா

காங்கிரஸ் கட்சியில் சேருகிறார் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்

காமதேனு

காங்கிரஸ் கட்சியில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லத்திகா என்ற படம் மூலமாக 2011ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். பின்னர் தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக உயர்ந்தார். நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளியான 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்படம் பவர் ஸ்டாருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்து. அதன் பின்னர் கோலி சோடா, மெர்லின் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு மோசடி வழக்கில் நடிகர் சீனிவாசன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

கடைசியாக கரோனாவிற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான 'கேப்மாரி' திரைப்படத்தில் பவர் பாண்டி துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டை பெற்றார். தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள இவர், வனிதா விஜயகுமாருக்கு ஜோடியாக, பிக்கப் டிராப் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் நடிகர் சீனிவாசன் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் கனகராஜ் அலுவலத்தில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இன்று சந்தித்து பேசியுள்ளார். அப்போது, தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொள்வதாக கூறியுள்ளார். நாளை அவர் காங்கிரஸில் சேருவார் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT