சினிமா

திருப்பதி கோயிலில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்

காமதேனு

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருப்பதி கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர்.

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த ஆறு வருடங்களாகக் காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்தன. அதுபற்றி இருவரும் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. சில மாதங்களுக்கு முன் இவர்களது நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது.

இந்நிலையில், இவர்கள் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் நேற்று காலை கோலாகலமாக நடந்தது. நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டினார். இந்தத் திருமணத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபல இந்தி நடிகர் ஷாருக் கான், இயக்குநர்கள் மணிரத்னம், அட்லீ, தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி உட்பட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இன்று (ஜூன் 10) காலை மணமக்கள் இருவரும் குடும்பத்தினருடன் திருப்பதி சென்றனர். அங்கு ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். அங்கு அவர்களைக் கண்ட ரசிகர்கள் வீடியோ, புகைப்படம் எடுத்தனர். கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்திலும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் பங்கேற்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT