சினிமா

முடிந்தது தேனிலவு: மும்பை திரும்பிய நயன்தாரா, ஜவான் ஷூட்டிங்கில் பங்கேற்பு

காமதேனு

தேனிலவு முடிந்து மும்பை திரும்பியுள்ள நடிகை நயன்தாரா, ஜவான் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில், கடந்த 9-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். ரஜினிகாந்த், இந்தி நடிகர் ஷாருக் கான், இயக்குநர்கள் மணிரத்னம், தயாரிப்பாளர் போனி கபூர் உட்பட திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்த மறுநாளே திருப்பதிக்கு ஜோடியாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா

பின்னர், உடல்நிலை சரியில்லாததால், திருமணத்திற்கு வராத தனது அம்மாவிடம் ஆசிவாங்க கேரளா சென்றனர். அங்கு சில நாட்கள் தங்கி இருந்த இருவரும் ஹனிமூனுக்கு தாய்லாந்து சென்றனர். அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை, விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில், ஹனிமூனை முடித்துவிட்டு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திரும்பியுள்ளனர். நடிகை நயன்தாரா அங்கிருந்து நேராக மும்பை சென்றார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் அவர் நடிக்கும் ஜவான் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்கிறார். இதன் ஷூட்டிங் ஜூலை 15-ம் தேதி வரை நடக்க இருக்கிறது.

SCROLL FOR NEXT