சினிமா

மாமல்லபுரத்தில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்!- திருப்பதியிலிருந்து திடீரென மாற்றப்பட்ட காரணம் என்ன?

காமதேனு

நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறும் இடம், மகாபலிபுரத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், இவர்கள் திருமணம் குறித்து அவ்வப் போது செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், அதுபற்றி இருவரும் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்கள் நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது. நிச்சயதார்த்த மோதிரத்தைக் காண்பித்தபடி, நடிகை நயன்தாரா வெளியிட்டிருந்த புகைப்படம் அப்போது வைரலானது.

இவர்கள் திருமணம், ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் நடக்க இருப்பதாகக் கூறப்பட்டது. திருமணம் நடக்க இருக்கும் மண்டபத்தை இருவரும் பார்த்து வந்ததாகவும் செய்திகள் வெளியாயின. இதற்கிடையே, இவர்கள் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் ஜூன் 9-ம் தேதி நடக்கிறது.

திருமணத்தில், 150 விருந்தினர்கள் கலந்துகொள்ள திருப்பதி கோயில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இவர்கள் திருமண அழைப்பிதழ் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

SCROLL FOR NEXT