சினிமா

சென்னையில் பிரம்மாண்ட திராட்சைத் தோட்டம்... நயன்தாராவுக்காக செட் போட்ட படக்குழுவினர்!

சிவசங்கரி

நயன்தாரா நடிக்கும் மண்ணாங்கட்டி படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைப்பெற இருந்த நிலையில், ஊட்டிக்கு நடிகை நயன்தாரா வர தயங்கியதால், சென்னையிலேயே பிரம்மாண்டமாக திராட்சைத் தோட்டத்தை செட் போட்டு படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர்.

’ஜவான்’ இந்தி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது வாங்கிய பூரிப்பில் இருக்கிறார் நடிகை நயன்தாரா. ஷாருக்கானுடன் நடித்த ‘ஜவான்’ படத்தைத் தொடர்ந்து 75-வது படமாக அன்னபூரணியிலும் நடித்திருந்தார். எனினும் அன்னப்பூரணி படம் ரசிகர்களிடையே பெரியளவில் பேசப்படவில்லை. இதனால் அடுத்து நடிக்கவிருக்கும் ‘மண்ணாங்கட்டி' படத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா.

அன்னபூரணி - நயன்தாரா

‘மண்ணாங்கட்டி’ படத்தில் நயன்தாராவோடு யோகி பாபு, தேவதர்ஷினி மற்றும் நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை ட்யூட் விக்கி இயக்கி வருகிறார். ‘மண்ணாங்கட்டி’ படத்தின் கதைக்களம் ஊட்டியில் நடப்பது போல உருவாக்கப்பட்ட நிலையில், நயன்தாரா ஊட்டிக்கு வர முடியாது என சொல்லிவிட்டதால் சென்னையிலேயே திராட்சை தோட்டம் செட் ஒன்றை அமைத்து படமாக்கி வருகின்றனர்.

சென்னையிலேயே திராட்சைத் தோட்டம் செட் போடப்பட்டதற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. கதைப்படி அந்த திராட்சைத் தோட்டம் இறுதியில் எரிவது போல காட்சிகள் இருப்பதால், அந்த காட்சியை ஊட்டியில் படமாக்க முடியாது என்பதால் சென்னையில் செட் போட்டு படமாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...


தேர்தலில் போட்டியில்லை... கமலுக்கு ராஜ்யசபா இடத்தை ஒதுக்கியது திமுக!

ஷூட்டிங் முடிந்து பார்ட்டி... சாய் பல்லவி உற்சாக நடனம்; வைரலாகும் வீடியோ!

சிலிண்டர் விலை குறைத்து, பெண்களை சமையலறையிலேயே இருக்கக்கூடியவர்களாக மாற்றுவதை ஏற்க முடியாது... கனிமொழி எம்.பி., பேட்டி!

தனியார் மருத்துவமனைகளின் பித்தலாட்டம்... சாட்டையடி கொடுக்கும் சத்யராஜ் மகள்!

இப்படியும் காசு பார்க்கலாமா? - 1,122 சடலங்களை ரூ.3.66 கோடிக்கு விற்ற கேரள அரசு!

SCROLL FOR NEXT