சென்னையில் பவதாரிணி உடல்... 
சினிமா

அன்பு மகளே....இளையராஜா கண்ணீர் பதிவு!

காமதேனு

'அன்பு மகளே' என இளையராஜா தன்னுடைய மகள் குறித்து கண்ணீருடன் பதிவிட்டுள்ளது ரசிகர்களின் இதயத்தை மேலும் கனமாக்கியுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி நேற்று மாலை இலங்கையில் காலமானார். கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த இவர் காலமாகியுள்ளது ரசிகர்களையும் திரையுலகினரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மனதை மயக்கும் குரலுக்கு சொந்தக்காரரான பவதாரிணியின் இந்த இழப்புக்கு பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இன்று காலை இலங்கையில் இருந்து சென்னை வந்துள்ள அவருடைய உடல் தி.நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்களும் ஏராளமான பொதுமக்களும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பவதாரிணியின் உடல் இன்று இரவு சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது.

அதிகபட்சமாக இரவு 10 மணி வரை சென்னையில் இறுதி அஞ்சலிக்கு உடல் வைக்கப்பட்டு அதன் பிறகு சொந்த ஊரான பண்ணைப்புரம் எடுத்து செல்லப்படுகிறது. அங்கு அவரது இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.

பவதாரணியின் சகோதரர்களான கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி என சொந்தங்கள் அனைவரும் கனத்த இதயத்துடனும் கண்ணீருடனும் வரும் காட்சிகள் பார்ப்பவர்களை உருக செய்தன. இதுபோன்ற சூழ்நிலையில் தான் இளையராஜா தன் மகள் பவதாரிணியுடன் சிறுவயதில் இசை கேட்டுக்கொண்டு அவரிடம் பாடல்களை படித்துக் காண்பிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, 'அன்பு மகளே' என கண்ணீருடன் ஒரு பதிவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். இது பார்த்தவர்களின் இதயத்தை மேலும் கலங்கடிக்க செய்யும் விதமாக அமைந்துள்ளது. இளையராஜா குடும்பத்திற்கு ரசிகர்களும் திரையுலகினரும் தங்கள் ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT