சினிமா

’அமரன்’ டூ ’கங்குவா’... இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாத மாஸ் ஹீரோ படங்கள்!

காமதேனு

விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட மாஸ் ஹீரோக்களின் படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தாலும் இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. அவை என்னென்ன படங்கள் என்பதைப் பார்க்கலாம்.

’தங்கலான்’:

கோலார் தங்க வயலை அடிப்படையாகக் கொண்டு உருவான கதைதான் ‘தங்கலான்’. பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டப் பலர் இதில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே முடிவடைந்தது. கோடைக் கொண்டாட்டமாக ஏப்ரல், மே மாதங்களில் படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.

’கங்குவா’:

சிறுத்த சிவா இயக்கத்தில் பல மொழி படமாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது ‘கங்குவா’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், இதன் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

’அமரன்’:

ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் தான் ‘அமரன்’. இதில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாக நடித்துள்ளார். படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இந்தப் படமும் எப்போது வெளியாகும் என சொல்லப்படவில்லை.

’விடாமுயற்சி’:

’விடாமுயற்சி’ படம் அறிவித்தே ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிறது. படப்பிடிப்பில் இருந்து குட்டி பிரேக் கிடைத்தாலும் ஃபேமிலி டைம், பைக் டூர் என கிளம்பி விடுகிறார் அஜித். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வருடமாவது பட அறிவிப்பு வெளியாகுமா என எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.

இந்தப் படங்கள் மட்டுமல்லாது, ‘விடுதலை2’, ‘ஏழு கடல் ஏழு மலை’ ஆகிய படங்களுக்கும் இன்னும் ரிலீஸ் தேதி சொல்லவில்லை.

இதையும் வாசிக்கலாமே...

ராகுல் காந்தியின் ஆண்மையை பரிசோதிக்க தாய், மகள்களை அவருடன் தூங்க அனுப்புங்கள்... காங்கிரஸ் பிரமுகரின் சர்ச்சை பேச்சு!

கைதானவங்க நம்மாளுங்க தான்; ஆனா ரூ.4 கோடி எனதில்லை... நயினார் நாகேந்திரன் விளக்கம்!

அதிர்ச்சி... ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரியின் மண்டை உடைப்பு: சென்னையில் பரபரப்பு!

நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு... நாட்டின் கவனம் ஈர்க்கும் நட்சத்திரத் தொகுதிகள் இவைதான்!

முன்பு முதலை, இப்போது சிறுத்தை... படுகாயங்களுடன் உயிர் பிழைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

SCROLL FOR NEXT