நடிகர் மன்சூர் அலிகான்
நடிகர் மன்சூர் அலிகான்  
சினிமா

சரத்குமாரை கலாய்த்த மன்சூர் அலிகான்... கிளியை வளர்த்து பாழுங்கிணத்துல தள்ளிட்டீங்க!

காமதேனு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவில் இணைத்தது பற்றி நடிகர் மன்சூர் அலிகான் பேசியிருக்கிறார். ”கிளியை வளர்த்து பாழுங்கிணத்துல தள்ளிட்டீங்க” என அவரை சீண்டும் விதமாக பேசியிருக்கிறார் மன்சூர்.

சரத்குமார் - அண்ணாமலை

நேற்று முன் தினம் நடிகர் சரத்குமார் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார். இதுகுறித்து பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். இதற்கெல்லாம் ஒரே பதிலாக, ”நாட்டு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்தேன்” என முடித்துவிட்டார் சரத்குமார்.

சமக- பாஜக இணைவைப் பற்றி நடிகர், இந்திய ஜனநாயக புலிகள் தலைவர் மன்சூர் அலிகான் பேசியிருப்பதாவது, “நாட்டாமை கிளியை வளர்த்து பாழுங்கிணற்றில் தள்ளி இருக்கிறார். அதற்காக நான் ஏன் என் மனைவியைக் கேட்டு முடிவெடுக்கவில்லை என்று கேட்காதீர்கள்” என்று சிரித்தார்.

மன்சூர் அலிகான்

அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து வருவதைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, “’போயும் போயும் எனக்கெல்லாம் சீட் கொடுக்க வேண்டுமா?’ என ஒரு அரசியல் கட்சி ஏளனமாகக் கேட்டிருக்கிறது. அது பாஜக என்று நினைக்கிறேன். அவர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் கால்தூசிக்குக் கூட வரமாட்டார்கள். உழைப்பால் முன்னேறியவர் அவர். திமுக-அதிமுகவுடன் எனக்கு இருப்பதெல்லாம் பங்காளி சண்டை. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

இந்த மண்ணுக்கு சம்பந்தமில்லாத ஒரு இயக்கத்தை வேரூன்ற விடமாட்டோம். சிஏஏ என குடியுரிமைச் சட்டத்தை கொண்டு வருகிறீர்களே, உங்கள் குடியுரிமை முதலில் என்ன?” என சரமாரியாகக் கேள்வி எழுப்பி இருக்கிறார் மன்சூர் அலிகான்.

இதையும் வாசிக்கலாமே...

மாங்கல்ய வரம் தரும் ‘காரடையான் நோன்பு... வழிபடும் முறை... சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

இந்த 23 வகை நாய்களை இனி வீட்டில் வளர்க்கக்கூடாது... மத்திய அரசு அதிரடி உத்தரவு!

வாட்ஸ்-அப் செயலியில் அசத்தலான அப்டேட்... பயனர்கள் மகிழ்ச்சி!

பகீர்... காதலியின் கையைத் துண்டித்த காதலன்: வேறு ஒருவருடன் நிச்சயமானதால் வெறிச்செயல்!

அதிமுகவுடன் தான் கூட்டணியா?...தேமுதிக மீண்டும் பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT