சினிமா

தங்கர் பச்சானின் படத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன்: மகிழும் மம்தா மோகன்தாஸ்!

காமதேனு

தங்கர் பச்சான் இயக்கும் படத்தில், பிரபல நடிகை முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சான், தனது மகன் விஜித் பச்சானை நடித்துள்ள 'டக்கு முக்கு டிக்கு தாளம்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். கரோனா காரணமாக இதன் ரிலீஸ் தள்ளிப் போனது.

இந்நிலையில் இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருப்பதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து 'கருமேகங்கள் கலைகின்றன' என்ற புதிய படத்தை இயக்க இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன், தங்கர் பச்சான் தெரிவித்திருந்தார். அதன்படி இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியுள்ளது.

இதில் பாரதிராஜா, யோகிபாபு, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். இவர்களை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.

தங்கர் பச்சான் எழுதிய சிறுகதை ஒன்றி்ன் அடிப்படையில் உருவாகும் இந்தப் படத்தை, வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் வீரசக்தி தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு கும்பகோணத்தில் தொடங்கியது. இதில் முக்கிய கேரக்டரில் மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார். தமிழில் பல படங்களில் நடித்துள்ள மம்தா, கடைசியாக விஷாலின் ’எனிமி’ படத்தில் நடித்திருந்தார்.

‘தங்கர் பச்சானின் 'கருமேகங்கள் கலைகின்றன' படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பதை, பெருமையாக நினைக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார் மம்தா மோகன்தாஸ்.

SCROLL FOR NEXT