சினிமா

நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல பாலிவுட் நடிகை!

காமதேனு

நயன்தாராவை சந்தித்த பாலிவுட் நடிகை மலைகா அரோரா, அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்தத் திருமணத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்தி நடிகர் ஷாருக் கான், இயக்குநர்கள் மணிரத்னம், அட்லீ, தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி உள்ளிட்ட திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமணத்துக்குப் பின்னர் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்தார். பின்னர் சென்னை திரும்பிய நயன்தாரா, ‘ஜவான்’ படப்பிடிப்பில் பங்கேற்றார்.

திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில், ’சில சிறந்த தருணங்களைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி’ என்று குறிப்பிட்டு திருமணத்தின்போது ஷாருக்கான், ரஜினிகாந்த் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகை நயன்தாராவை மும்பையில் சந்தித்த பிரபல இந்தி நடிகை மலைகா அரோரா வாழ்த்து தெரிவித்துள்ளார். ’’நயன்தாரா -விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துகள், உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி’’ என்று குறிப்பிட்டுள்ள மலைகா, அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

மலைகா அரோரா, மணிரத்னத்தின் உயிரே படத்தில் ’தைய தைய தையா தையா பாடலுக்கு நடனம் ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT