சினிமா

கோலார் தங்கச்சுரங்க அடிமைகள் கதை திரைப்படமாகிறது: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கிறார்

காமதேனு

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் கமல்ஹாசனைப் போல உடலை வருத்தி நடிக்கக்கூடிய நடிகர்களில் விக்ரமிற்கு தனி இடம் உண்டு. தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அள்ளிக்குவித்த விக்ரம் நடிப்பில் நடிப்பில் சமீபத்தில் 'பொன்னியின் செல்வன்', 'கோப்ரா' ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல விமர்சனத்தைப் பெற்றுள்ளன.

இப்படத்திற்குப் பிறகு நடிகர் விக்ரம் , இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணைந்து புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் சூட்டிங் அக்.18-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு ஆந்திரா மாநிலம் கடப்பாவிலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மதுரையிலும் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கோலார் தங்கச்சுரங்கத்தில் அடிமையாக இருந்தவர்கள் குறித்த கதையில் தான் விக்ரம் இந்த படத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT