நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மகேஷ் நாராயணன்.
நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மகேஷ் நாராயணன். 
சினிமா

நடிகர் கமல்ஹாசனின் 'தேவர் மகன் 2'-ம் பாகம் நிறுத்தம்

காமதேனு

நடிகர் கமல்ஹாசன் - மகேஷ் நாராயணன் இணையும் 'தேவர் மகன் 2'-ம் பாகம் படம் நிறுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தற்போது ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படம் முடித்தப் பிறகு அடுத்து மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணனுடன் படத்தில் இணைவார் என முன்பு அறிவிக்கப்பட்டது. மேலும், இது ‘தேவர் மகன்’ படத்தின் அடுத்த பாகம் எனவும் இதன் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இந்தப் படம் நிறுத்தப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் இருவரும் பேசி சுமுகமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மகேஷ் நாராயணன் ‘விஸ்வரூபம்’ மற்றும் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் படத்தொகுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கமல்ஹாசன் தற்போது ‘இந்தியன் 2’ படத்தை முடித்த பிறகு அடுத்து மணிரத்னமுடனான படத்தைத் தொடங்குவார். இதுமட்டுமல்லாது, ஹெச். வினோத், பா.ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் ஆகியோரது படங்களும் இவரது கைவசம் உள்ளது.

SCROLL FOR NEXT