சினிமா

அதிரப்பள்ளியில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா!

காமதேனு

’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலம் அதிரப்பள்ளியில் நடந்து வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கும் படம், ’காத்து வாக்குல ரெண்டு காதல்’. இதில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்துடன் இணைந்து விக்னேஷ் சிவன், தனது ரெளடி பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கிறார். ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகும் இந்தப் படத்தின் டீசர், சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

’காத்து வாக்குல ரெண்டு காதல்’, சமந்தா, விஜய் சேதுபதி, நயன்தாரா

இந்நிலையில் இந்தப் படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலம் அதிரப்பள்ளியில் இன்று தொடங்கியுள்ளது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் அங்கு சென்றுள்ளனர். அங்குள்ள அருவிக்கு கீழே ஓடும் ஆற்றில் படப்பிடிப்பு நடந்துவருகிறது. விக்னேஷ் சிவன் இவர்கள் நடிக்கும் காட்சியை இயக்கி வருகிறார்.

முன்னதாக, நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கேரளாவில் புகழ்பெற்ற சோட்டாணிக் கரை பகவதி அம்மன் கோயிலில் நேற்று சாமி தரிசனம் செய்தனர். இவர்கள் வருவதை அறிந்ததும் அங்கு அங்கு ஏராளமான பக்தர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT