சினிமா

ஓடிடியில் நாளை ரிலீஸாகிறது ஜெயமோகனின் 'ரத்தசாட்சி' திரைப்படம்

காமதேனு

எழுத்தாளர் ஜெயமோகன் கதையை தழுவி எடுக்கப்பட்ட ‘ரத்தசாட்சி’ திரைப்படம் ஓடிடியில் நாளை (டிச.9) வெளியாகிறது.

ஆஹா தமிழ், மகிழ் மன்றம் தயாரிப்பில் இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் இயக்கத்தில் ‘ரத்த சாட்சி’ திரைப்படம் உருவாகியுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனின் ‘கைதிகள்’ சிறுகதைத் தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

இப்படத்தில் கண்ணா ரவி, இளங்கோ குமாரவேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் வினோத், ஆறு பாலா, வினோத் முன்னா, அர்ஜுன் ராம், ஓஏகே சுந்தர் உள்பட நடித்துள்ளனர். ஜாவேத் ரியாஸ் இசையில் உருவாகியுள்ள இப்படம் ‘ஆஹா தமிழ்’ ஓடிடி தளத்தில் நாளை ( டிச. 9) வெளியாக உள்ளது.

இப்படத்தின் இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் கூறுகையில், “ஜெயமோகன் சார், இந்தக் கதையைக் கொடுக்கவில்லை என்றால் என்னால் இந்தப் படத்தை எடுத்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. மணிரத்னம் மற்றும் வெற்றி மாறன் இருவரும் இந்தக் கதையை படமாக்க ஆசைப்பட்டார்கள். இவர்களையும் தாண்டித்தான் ஜெயமோகன் எனக்கு இந்தக் கதையை கொடுத்தார்" என்று நெகிழ்வுடன் கூறினார்.

SCROLL FOR NEXT