நடிகர் அகில் அக்கினேனி
நடிகர் அகில் அக்கினேனி  `நல்ல படத்தைக் கொடுக்கத் தவறிவிட்டோம்; மீண்டும் வலிமையுடன் வருவேன்’: படத்தோல்வி குறித்து நடிகர்
சினிமா

`நல்ல படத்தைக் கொடுக்கத் தவறிவிட்டோம்; மீண்டும் வலிமையுடன் வருவேன்’: படத்தோல்வி குறித்து நடிகர் அகில்

காமதேனு

தன்னுடைய படத்தோல்வி குறித்து நடிகர் அகில் அக்கினேனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகரான நாகர்ஜூனாவின் மகன் அகில் அக்கினேனி. இவரது நடிப்பில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ‘ஏஜென்ட்’ திரைப்படம் வெளியாகி தோல்வி அடைந்தது. படத்தின் தயாரிப்பாளர் அனில் சுங்கரா முழுமையான ஸ்கிரிப்ட் இல்லாமல் படப்பிடிப்புக்கு நாங்கள் சென்றதும் தோல்விக்கு ஒரு காரணம் எனக் கூறி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் அகில் அக்கினேனி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக படம் வெளிவர வேண்டும் என முயற்சி செய்தோம். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. ரசிகர்களுக்கு நல்ல படத்தைக் கொடுக்கத் தவறி விட்டோம். தயாரிப்பாளர் அனில்தான் எங்களுக்கு பெரும் பலமாக இருந்தார். அவருக்கு சிறப்பு நன்றி. மீண்டும் வலிமையுடன் திரும்ப வருவேன்’ என அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT