சினிமா

செல்போனை சமர்ப்பிக்க ஏன் பயம்? திலீப்பிடம் நீதிமன்றம் கேள்வி

காமதேனு

விசாரணை அதிகாரிகளிடம் செல்போனை சமர்ப்பிக்க நடிகர் திலீப் ஏன் பயப்பட வேண்டும் என்று கேரள நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.

நடிகை கடத்தப்பட்ட விவகாரத்தில், விசாரணை அதிகாரியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக நடிகர் திலீப் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில், நடிகர் திலீப் மற்றும் அவர் உறவினர்கள் உட்பட 6 பேரிடம் குற்றப்பிரிவு போலீஸார் சமீபத்தில் விசாரணை நடத்தினர். இந்நிலையில், இந்த வழக்கில் புதிய மனுவை கேரள உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த குற்றப்பிரிவு போலீஸார், விசாரணைக்கு நடிகர் திலீப் ஒத்துழைக்கவில்லை என்றும் செல்போனை அவர் தரமறுத்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

போலீஸார், செல்போனை கேட்கக் கூடாது என்றும் விசாரணை அதிகாரிகளை, தான் நம்பவில்லை என்று நடிகர் திலீப் கூறியதாகவும் அவர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து, விசாரணைக்கு நடிகர் திலீப் ஒத்துழைப்பு அளிக்காவிட்டால், அவருடைய முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்படும் என்பதை நினைவுபடுத்துவதாக நீதிமன்றம் எச்சரித்தது. பின்னர் தொலைபேசியை சமர்ப்பிக்க அவர் ஏன் பயப்படுகிறார் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

SCROLL FOR NEXT