’கோபி’ சதீஷ்
’கோபி’ சதீஷ் என் மீது கோபம், எரிச்சல் இருக்கலாம்'- `பாக்கியலட்சுமி’ கோபி சதீஷ் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
சினிமா

`என் மீது கோபம், எரிச்சல் இருக்கலாம்'- `பாக்கியலட்சுமி’ கோபி சதீஷ் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

காமதேனு

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து நடிகர் நடிகர் கோபி விலக இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியலுக்கும் இதன் கதாபாத்திரங்களுக்கும் நிறைய ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரக்கூடிய சதீஷூக்கும் அவரது ரகளையான நடிப்புக்கும் நிறைய ரசிகர்கள் உண்டு. அவரது கதாபாத்திரத்தைத் திட்டி நிறைய மெசேஜ் சமூகவலைதள பக்கங்களில் வருவதாகவும் அது வெறும் கதாபாத்திரம் என்றும் பலமுறை விளக்கம் கொடுத்து சதீஷ் வீடியோவும் பதிவிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில், இந்தத் தொடரில் இருந்து விலக இருப்பதாக சதீஷ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், ‘நான் சொல்லக்கூடிய இந்த விஷயத்தால் பலருக்கும் வருத்தம், கோபம், எரிச்சல் இருக்கலாம். ஆனால், இது நடக்க இருப்பது உறுதி. இன்னும் 15 எபிசோட்களில் நான் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து விலக இருக்கிறேன். இதற்கு காரணங்கள் பல இருக்கின்றன. குறிப்பாக தனிப்பட்ட காரணங்களும் உண்டு. இந்த வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கு நன்றி. யாரையும் புண்படுத்தாமல் எல்லாரும் பாராட்டும் அளவுக்கு நடித்துள்ளேன் என்பதில் மகிழ்ச்சி’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT