சினிமா

தென்னிந்திய சினிமாவில் மீண்டும் ஜெனிலியா!

காமதேனு

'பாய்ஸ்', 'சந்தோஷ் சுப்பிரமணியம்', 'வேலாயுதம்', 'உத்தமபுத்திரன்' உட்பட பல படங்களில் நடித்தவர் ஜெனிலியா. திருமணத்துக்குப் பிறகு நடிப்பதைக் குறைத்திருந்த அவர், சில இந்தி படங்களில் நடித்தார். இந்நிலையில் நீண்ட இடை வெளிக்குப் பிறகு அவர் தென்னிந்திய படத்தில் நடிக்கிறார்.

பிரபல கர்நாடகத் தொழிலதிபரும் அரசியல்வாதியுமான ஜனார்த்தன ரெட்டி மகன் கிருத்தி ரெட்டி, ஹீரோவாக அறிமுகமாகும் இந்தப் படத்தை, ராதாகிருஷ்ண ரெட்டி இயக்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். ‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார்.

நடிகை ஸ்ரீலீலா, கிருத்தி ரெட்டி, ஜெனிலியா, ராஜமவுலி

இதில், நடிகை ஜெனிலியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் தொடக்கவிழா பெங்களூருவில் நடந்தது. இயக்குநர் ராஜமவுலி கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். படத்தின் நாயகி ஸ்ரீலீலா, நடிகை ஜெனிலியா உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் ராதாகிருஷ்ண ரெட்டி கூறும்போது, “இதில் ஜெனிலியாவுக்கு ஸ்பெஷல் கேரக்டர். அவரிடம் கதையை சொன்னதும் உற்சாகமானார். மீண்டும் தென்னிந்திய சினிமாவுக்கு வருவதில் அவருக்கும் மகிழ்ச்சி. அவருடைய இரண்டாவது இன்னிங்ஸுக்கு இந்தப் படம் உதவும்” என்றார். இந்தப் படத்தில் ரவிச்சந்திரன், குஷ்பு உட்பட பலர் நடிக்கின்றனர்.

SCROLL FOR NEXT