துல்கர் சல்மான்
துல்கர் சல்மான் twitter
சினிமா

மம்மூட்டியை அடுத்து துல்கர் சல்மானுக்கு கரோனா உறுதி

காமதேனு

நடிகர் மம்மூட்டியை அடுத்து அவரது மகன் துல்கர் சல்மானுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த தொற்று பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. நடிகர் கமல்ஹாசன், வடிவேலு, அருண் விஜய், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், த்ரிஷா உட்பட பலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தனர்.

மம்மூட்டி, குஷ்பு உட்பட சிலர் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மலையாள நடிகர் சுரேஷ் கோபியும் தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று தெரிவித்திருந்தார்.

துல்கர் சல்மான்

இந்நிலையில் மம்மூட்டியின் மகனும் நடிகருமான துல்கர் சல்மானுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ள துல்கர் சல்மான், ’கரோனா தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். லேசான காய்ச்சல் அறிகுறி மட்டுமே உள்ளன. மற்றபடி நலமாக இருக்கிறேன்.

கடந்த சில நாட்களாக படப்பிடிப்பில் என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், தயவு செய்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். கரோனா அறிகுறி இருந்தால், சோதனை செய்துகொள்ளுங்கள். இந்த தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. தயவு செய்து முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT