சினிமா

'தனுஷ் சாருக்கு நன்றி': நெகிழ்ச்சியை வெளிப்படுத்திய இயக்குநர் விக்னேஷ்சிவன்

காமதேனு

இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் தனுஷூக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி நடித்த ‘நானும் ரெளடிதான்’ திரைப்படம் வெளியானது. படம் வெளியாகி கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றைப் பதிவிட்டு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

அதில் அவர், " இந்தத் திரைப்படம் வெளியாகி ஏழு வருடங்கள் நிறைவடைந்தது எனக்கு மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்திருக்கிறது. இந்தப் படத்தில் நான் கொடுத்த உழைப்புதான் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது. அதற்காக நான் நன்றியுடன் இருப்பேன். தனுஷ் சாருக்கு நன்றி"என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.

‘நானும் ரெளடிதான்’ பட சமயத்தில்தான் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. மேலும் விக்னேஷ் சிவனின் முதல் படமான ‘போடா போடி’ தோல்விக்குப் பிறகு விக்னேஷ் சிவனின் ‘நானும் ரெளடிதான்’ கதையை நடிகர் தனுஷின் ‘வொண்டர்பார்’ நிறுவனம் தயாரித்திருந்தது. லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை வெளியிட, அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT