சினிமா

`நாத்திகம் பேசுபவர் மனிதரே இல்லை'- வெற்றிமாறனை விமர்சிக்கும் இயக்குநர் பேரரசு

காமதேனு

`நாத்திகம் பேசுபவர் மனிதரே இல்லை' என்று இயக்குநர் வெற்றிமாறனை கடுமையாக விமர்சித்துள்ளார் இயக்குநர் பேரரசு.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடந்த கலை திருவிழாவில் பங்கேற்று பேசிய இயக்குநர் வெற்றிமாறன், "ராஜராஜ சோழனை ஒரு இந்து அரசனாக்குவது என தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. சினிமாவிலும் நிறைய அடையாளங்களை எடுக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும்" என்று கூறினார்.

இவரது பேச்சுக்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் பேரரசு, "ராஜராஜ சோழன் இந்து இல்லை என்றால் வேறு என்ன கிறிஸ்தவரா அல்லது இஸ்லாமியரா?. உலகத்திலேயே இந்தியா சிறந்த நாடாக திகழ்கிறது. அதேபோலத்தான் சைவம், வைணவம் உள்ளிட்ட அனைத்தும் இந்திய மதங்களும் இதையே இந்து என்றார்கள். உங்களுக்கு சாமி கும்பிட பிடிக்கவில்லை என்றால் இந்துக்கள் பற்றி ஏன் பேசுகிறீர்கள்?. நாத்திகம் பேசுபவர் மனிதரே இல்லை" என்று காட்டமாக கூறினார்.

SCROLL FOR NEXT