ஆனந்த்.எல்.ராய் - தனுஷ்
ஆனந்த்.எல்.ராய் - தனுஷ் 
சினிமா

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் மீண்டும் தனுஷ்!

காமதேனு

இந்திப் பட இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் நடிகர் தனுஷ் மீண்டும் நடிக்க இருக்கிறார்.

நடிகர் தனுஷ், ரான்ஜன்னா (Raanjhanaa) என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். இந்தப் படத்தில் சோனம் கபூர் அவர் ஜோடியாக நடித்தார். படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கினார். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து ஆனந்த் எல்.ராய் இயக்கிய ’அட்ரங்கி ரே’ என்ற இந்திப் படத்தில் நடித்தார் தனுஷ்.

இதில் அக்‌ஷய்குமார், சாரா அலிகான் உட்பட பலர் நடித்தனர். இந்தப் படம் கடந்த டிசம்பர் மாதம் ஓடிடியில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை அடுத்து நடிகர் தனுஷ் மீண்டும் இரண்டு இந்தி படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இயக்குநர் ஆனந்த்.எல்.ராயுடன் தனுஷ்

அதில் ஒரு படத்தை ஆனந்த்.எல்.ராய் இயக்குகிறார். படத்தை அவருடைய கலர் யெல்லோ புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது ஆக்‌ஷன் கலந்த காதல் கதை என்று கூறப்படுகிறது. இதையடுத்து மேலும் பெரிய இந்தி பட நிறுவனம் ஒன்றும் தனுஷை தங்கள் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

நெட்பிளிக்ஸின் ’த கிரே மேன்’படத்தில் நடித்துள்ள தனுஷ், இப்போது தமிழ், தெலுங்கில் உருவாகும் ’வாத்தி’ படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. அவர் நடித்துள்ள ’மாறன்’அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. மித்ரன் ஜஹவர் இயக்கும் ‘திருச்சிற்றம்பலம்’, செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’படங்கள் அவருக்கு அடுத்தடுத்து இருக்கின்றன.

SCROLL FOR NEXT