சினிமா

பாங்காங் புறப்பட்டார் அஜித்: விமான நிலையத்தில் உற்சாக செல்ஃபி!

காமதேனு

‘துணிவு’ திரைப்படத்தின் ஷூட்டிங்கிற்காக அஜித் குமார் இன்று காலையில் பாங்காங் புறப்பட்டுச் சென்றார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ‘துணிவு’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக அஜித்குமார், மஞ்சு வாரியர் உள்ளிட்ட படக்குழுவினர் பாங்காங் புறப்பட்டு சென்றனர். இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த அஜித்துடன் விமான நிலைய ஊழியர்கள் உற்சாகமாக செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் தனது 61-வது படத்தில் நடித்துவருகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் கோக்கன், வீரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் தயாரித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் நிறைவடைந்துள்ளது. தற்போது படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பாங்காங்கில் 25 நாட்கள் நடக்கவிருப்பதாகவும், ஒரேகட்டமாக படத்தை முழுவதுமாக முடித்துவிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களாக இமயமலை , லடாக், ஜம்மு பகுதிகளில் ஜாலியான பைக் ட்ரிப்பில் இருந்த அஜித், தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பில் உற்சாகமாக இணையவுள்ளார்.

SCROLL FOR NEXT