சினிமா

‘ஐஸ் வாரியமே’ - பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையருடன் செல்ஃபி எடுத்த ஐஸ்வர்யா ராய்!

காமதேனு

‘பொன்னியின் செல்வன்’ திரைப்பட ஷூட்டிங்கின் போது ஐஸ்வர்யா ராயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் பார்த்திபன். இந்த படங்களில் சரத்குமாரும் இடம்பெற்றுள்ளார்.

மிகப் பிரமாண்டமான முறையில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வரும் 30ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமாரும், சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் பார்த்திபனும் நடித்துள்ளனர். பெரிய பழுவேட்டரையரின் காதலியாக நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயும் நடித்துள்ளார்.

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பின்போது தன்னுடனும், சரத்குமாருடனும் இணைந்து ஐஸ்வர்யா ராய் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த ட்வீட்டில், “ ஐஸ் வாரியம். கற்றுக் கொள்ள காற்று கொள்ளும் மூங்கில் துளைகளில் இருந்து இசை வரும் என கோடியாய் கொட்டிக் கிடக்கின்றது இப்பூமியில்.அப்படி இப்பெண்ணிடமிருந்து... தாயானப் பிறகும், தான் விரும்பும் கலையை தொடர, ஆரோக்கியத்தை+அழகை காத்திட கடும் முயற்சியும்,விடா பயிற்சியும் செய்கிறார்.

அழகென நான் காண்பது… பிறைநிலவு வானில் இருந்து மறையுமுன்னே முழுநிலவாய் படப்பிடிப்பு தளத்தில் நுழைபவர் வசனங்களை(இடை வரும் புன்னகை உட்பட) மனப்பாடம் செய்து ஒன் மோர் கேட்கா ஈகோவுடன் தயாராகிவிட்டு, பின் அனைவரிடமும் அன்பொழுக பழகுகிறார்” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT