படப்பிடிப்புத் தளத்தில் ராம்சரண்...
படப்பிடிப்புத் தளத்தில் ராம்சரண்... 
சினிமா

Gamechanger: ராம்சரணைப் பார்க்க குவிந்த கூட்டம்... தடுக்கி விழுந்த பெண்ணால் ஷூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு!

காமதேனு

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம்சரண் நடித்து வரக்கூடிய ‘கேம் சேஞ்சர்’ படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இங்கு நடிகர் ராம்சரணைப் பார்க்க கூட்டம் குவிந்தது. அப்போது அந்தக் கூட்டத்தில் பெண் ஒருவர் தடுக்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படப்பிடிப்புத் தளங்களில் தங்களுக்குப் பிடித்த நடிகர், நடிகைகளைப் பார்க்க ரசிகர்கள் குவிவது வழக்கம். பல சமயங்கள் தள்ளு முள்ளு ஏற்படுவதையும் பார்த்திருக்கிறோம். அப்படியான ஒரு சம்பவம்தான் நடிகர் ராம்சரணின் ‘கேம் சேஞ்சர்’ படப்பிடிப்புத் தளத்தில் நடந்திருக்கிறது. விசாகப்பட்டினத்தில் ஒரு பிரம்மாண்டமான மாநாடு போல மேடை அமைத்து இதன் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள்.

அப்போது ராம்சரணைப் பார்க்க அங்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தார்கள். குறிப்பாக பெண் ரசிகைகள் அவரைப் பார்க்க கூட்டத்தில் முண்டி அடித்துக் கொண்டு ஓட, அதில் சிக்கிய ஒரு பெண் தடுமாறி விழுந்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

படப்பிடிப்புத் தளத்தில் ராம்சரண்...

இயக்குநர் ஷங்கர் ‘இந்தியன்2’ படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் ‘கேம் சேஞ்சர்’ படப்பிடிப்புக்கு பிரேக் கொடுக்கப்பட்டிருந்தது. இப்போது விசாகப்பட்டினத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. அடுத்ததாக இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதில் 1000 ஸ்டண்ட் கலைஞர்கள் பங்கேற்பார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

கார்த்திக் சுப்பாராஜூ திரைக்கதை அமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டப் பலர் இதில் நடிக்கின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அமலுக்கு வந்தது தேர்தல் விதிமுறைகள்.. இனி இதையெல்லாம் செய்யக்கூடாது!

செல்லூர் ராஜூ செம தாக்கு... தமிழ்நாட்டுல இருக்கிற ஒரே அரைவேக்காடு அண்ணாமலை தான்!

குட் நியூஸ்... அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000!

இரட்டை இலை சின்னம் எங்களுக்கு வேண்டும்... தலைமை தேர்தல் ஆணையருக்கு ஓபிஎஸ் கடிதம்!

பெண்ணைக் கேலி செய்த வாலிபர் கோடாரியால் வெட்டிக் கொலை.. தாபாவில் பயங்கரம்!

SCROLL FOR NEXT