நடிகர் பிரதீப் கோட்டயம்
நடிகர் பிரதீப் கோட்டயம் 
சினிமா

திடீர் மாரடைப்பு: பிரபல நடிகர் மரணம்

காமதேனு

பிரபல நடிகர் பிரதீப் கோட்டயம், மாரடைப்பால் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 61.

பிரபல மலையாள நடிகர் பிரதீப் கோட்டயம். பெரும்பாலும் காமெடியுடன் கூடிய வேடங்களில் நடிக்கும் இவர், அதற்காகவே அதிகம் பேசப்பட்டார். மலையாளத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஐ.வி.சசியின் ’ஈ நாடு ஈனாலே வரே’ என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமான பிரதீப், தட்டத்தின் மறயத்து, ஒரு வடக்கன் செல்ஃபி, வெல்கம் டு சென்ட்ரல் ஜெயில் உட்பட தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார்.

தமிழில், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ’விண்ணைத் தாண்டி வருவாயா’, உதயநிதி நடித்த ’நண்பேன்டா’, அட்லீ இயக்கிய ’ராஜா ராணி’, விஜய்யின் ’தெறி’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு இன்று அதிகாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கோட்டயத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மறைந்த பிரதீப்புக்கு மாயா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

அவர் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT