கேள்

மகேஷுக்குத்தான் இனி மவுசா?- மனம் கலங்கும் நேரு ஆதரவாளர்கள்

காமதேனு

கரு.முத்து
muthu.k@kamadenu.in

மூத்தவர் நேரு, இளையவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி என திருச்சி மாவட்டத்துக்கு இரண்டு அமைச்சர்கள். இதனால்,  “அடித்தது லக்கி ப்ரைஸ்” என்று மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டிய திருச்சி உடன்பிறப்புகள், இவர்கள் இருவருக்கிடையே நடக்கும் அதிகாரப் போட்டியில் மனம் குழம்பிப்போய் தவிக்கிறார்கள்.

குழம்பிய அதிகாரிகள், குழப்பிய தொண்டர்கள்!

சமீப காலமாகவே நேருவுடன்  முரண்டுபிடித்துக் கொண்டிருக்கும் மகேஷ் பொய்யாமொழி அமைச்சரானதுமே, தான் மாவட்டச் செயலாளராக உள்ள திருச்சி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் தனியாக ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். மத்திய மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்டத்தில் நேரு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். இரண்டிலும் கலந்துகொள்ள வேண்டும் என்பதால் மாநகராட்சி, காவல், சுகாதாரம் ஆகிய துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் பாடு பெரும் திண்டாட்டமாகிப்போனது.

SCROLL FOR NEXT