ஆண்டவன் சொல்றான்... ஆர்.எஸ்.ராஜன் செய்றான்!- ரஜினி பெயரில் கட்சி தொடங்கும் ரசிகர்

ஆண்டவன் சொல்றான்... ஆர்.எஸ்.ராஜன் செய்றான்!- ரஜினி பெயரில் கட்சி தொடங்கும் ரசிகர்

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி, திமுகவைத் தொடங்கிய அண்ணா, தனது கடைசிக் காலம் வரையில் கட்சியின் தலைவர் பதவியைக் காலியாகவே வைத்திருந்தார். தந்தை பெரியாருக்காகவே அந்த இடத்தை நிரப்பாமல் இருந்ததாகச் சொல்வார்கள். அதேபோல் ரஜினி பெயரில் கட்சி தொடங்கி, அவருக்காகத் தலைவர் பதவியைக் காலியாக வைக்கப் போவதாகச் சொல்லி அதிரவைக்கிரார் ரஜினி ரசிகரான ஆர்.எஸ்.ராஜன்.

ரஜினிக்காகக் காங்கிரஸிலிருந்து வந்தவர்

தீவிர ரஜினி ரசிகரான ராஜன் காங்கிரஸ் கட்சியில் விவசாய பிரிவில் மாநிலத் தலைவராக இருந்தவர். 2017-ல் ரஜினியின் அரசியல் அறிவிப்பைக் கேட்டு தன் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரஜினி மக்கள் மன்றத்தில் ஐக்கியமானவர். கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்த முதல் நபர் இவர்தான். ரஜினி குடும்பத்தினரோடும் நெருங்கிய தொடர்பில் இருந்த ஆர்.எஸ்.ராஜன், தற்போது குமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இணைச் செயலராக உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in