ஆர்ப்பரித்த அழகிரி... அமைதிகாத்த ஸ்டாலின்..!- இனி என்ன செய்யும்  ‘அஞ்சாநெஞ்சன்’ அணி?

ஆர்ப்பரித்த அழகிரி... அமைதிகாத்த ஸ்டாலின்..!- இனி என்ன செய்யும்  ‘அஞ்சாநெஞ்சன்’ அணி?

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

நமக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை... எதிரிக்கு ரெண்டு கண்ணும் போகணும்... என்று இறங்கிவிட்டார் மு.க.அழகிரி. அவரது இப்போதைய நகர்வுகள் தன் எதிர்காலத்துக்கு எந்த வகையிலும் உதவாது என்று தெரிந்திருந்தும், அவர் ஸ்டாலினை பலவீனப்படுத்தும்  பாவ்லா வேலைகளில் தீவிரம்காட்டி வருகிறார்.

ஆலோசனைக் கூட்டம்

மதுரையில் கடந்த 3-ம் தேதி நடந்த மு.க.அழகிரியின் ஆதரவாளர்களின் கருத்து கேட்புக்கூட்டத்தில் சுமார் 8 ஆயிரம் பேர் பங்கேற்றார்கள். பெயர்தான் கருத்துக்கேட்பு கூட்டமே தவிர, கருத்துச் சொல்லும் அளவுக்குத் தகுதியான ஆட்கள் மிகமிக குறைவாகவே இருந்தார்கள். இந்தக் கூட்டத்தில் ஆரவாரத்துடன் கலந்து கொண்டவர்களில் பெரும்பகுதியினர் இளைஞர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in