ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கடுமையான உயர்வை சந்தித்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து 5,020 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 40,160 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பல மாதங்களுக்கு பிறகு ஒரு சவரன் தங்கத்தின் விலை 40 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் விறுவிறுவென உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் 1.20 ரூபாய் உயர்ந்து விலை 71 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 1200 ரூபாய் உயர்ந்து 71,000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.