
தனியார் வங்கிகளில் பணியாளர் விலகல் 30 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், இந்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
வர்த்தக நாளிதழ் சார்பில் மும்பையில் வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீடு சேவைகள் திறனறிதல் ஆண்டு மாநாட்டில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”சில முன்னணி தனியார் வங்கிகளில் பணியாளர் விலகல் 30 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இந்த விவகாரத்தை கையாள தனிக்குழு ஒன்றை வங்கிகள் உருவாக்க வேண்டும். இன்றைய இளைஞர்களின் பணித்தேடல் என்பது முற்றிலும் மாறுபட்டுள்ளது. குறிப்பாக பணிமாறுதல் சிந்தனை என்பது முற்றிலுமாக மாறுபட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் தொடர்ந்து வலுவாக உள்ளது.இரண்டாம் காலாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி விகிதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும். புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலை, சர்வதேச வளர்ச்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. ஆனால், எந்த ஒரு சாத்தியமுள்ள அச்சுறுத்தல் சூழலையும் திறம்பட எதிர்கொள்ளும் வகையில் சிறந்த திறனை இந்தியா பெற்றுள்ளது” என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று கர்வா சௌத்: நிலவை ஏன் பெண்கள் சல்லடை வழியே பார்க்கிறார்கள்?! விரத பலன்களைத் தெரிஞ்சுக்கோங்க!
அதிகாலையிலேயே அதிர்ச்சி... சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு! கதறும் பொதுமக்கள்!
பகீர்...நடுரோட்டில் போலீஸ்காரர் மீது கொலைவெறி தாக்குதல்.... அதிர்ச்சி வீடியோ
டிகிரி முடித்தவர்களுக்கு விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு... இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!