அதிர்ச்சி... இரண்டு வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்தது ரிசர்வ் வங்கி!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

இந்த வாரத்தில் மூன்று வங்கிகளின் உரிமங்களை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. அதே நேரத்தில், பல வங்கிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட வங்கியை சேர்ந்த வாடிக்கையாளர்களால் வங்கியில் பணம் எடுக்க முடியாது.

திருவனந்தபுரம் அனந்தசயனம் கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக செப்டம்பர் 21ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. தற்போது மேலும், மல்லிகார்ஜுனா பட்டான கூட்டுறவு வங்கி நியாமிதா (மஸ்கி, கர்நாடகா) மற்றும் தேசிய கூட்டுறவு வங்கி லிமிடெட் (பஹ்ரைச், உபி) ஆகிய இரண்டு வங்கிகளின் உரிமங்களையும் மத்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. அவர்களின் வங்கி வணிகம் தடை செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, வங்கிகள் தங்கள் வங்கித் தொழிலைத் தொடர அனுமதித்தால், அது பொது நலனைப் பாதிக்கும் என குறிப்பிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

இந்த வங்கிகளுக்கு போதிய மூலதனம் மற்றும் வருவாய் ஈட்டும் திறன் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால் இந்த இரண்டு வங்கிகளும் வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949ன் பிரிவு 56, பிரிவு 11 (1) மற்றும் பிரிவு 22 (3)(D) ஆகியவற்றின் விதிகளுக்கு இணங்கத் தவறிவிட்டன. இது மட்டுமல்லாமல், இந்த வங்கியால் அதன் முழுப் பணத்தையும் செலுத்த முடியவில்லை. இவை வைப்பாளர்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பவை என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

செப்டம்பர் 22 முதல் மல்லிகார்ஜுன் பட்டான கூட்டுறவு வங்கி நியாமிதா மற்றும் தேசிய கூட்டுறவு வங்கி லிமிடெட் ஆகியவற்றின் வங்கி வணிகத்தை ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. டெபாசிட்களை ஏற்றுக்கொள்வது மற்றும் டெபாசிட்களை திருப்பிச் செலுத்துவதும் இதில் அடங்கும். டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) விதிமுறைகளின் கீழ், ஒவ்வொரு டெபாசிட்டரும் ரூ. 5 லட்சம் வரை தனது டெபாசிட்களை கோருவதற்கு உரிமை பெறுவார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in